ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

0
63

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மே 17க்கு பின் உள்ளூர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தயாராக்கி வருகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து இயக்கப்படுமா என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்திற்குள் பயணிக்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தின் மூல பயணிக்கலாம் என்றும் அப்படி பயணிப்பவர்கள் தனிமை படுத்துதல் வழிமுறையை பின்பற்றி தனிமைப்படுத்திய பின்பே வெளியில் வர அனும்பதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழகத்தை ஒட்டி இருக்கும் மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் செல்ல 044-24794709 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், அவர்கள் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டுள்ள பேருந்து குறித்த விவரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K