ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

0
68

ஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!

சமீபத்தில், சினிமா துறையில் பைனான்ஸ் செய்துவரும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரி சோதனையின் மூலமாக பலகோடி ரூபாய் கைப்பற்றியது வருமான வருமான வரித்துறை. அன்புச்செழியன் அதிமுகவின் மதுரை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.

விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை குறித்து, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது; சற்றும் யோசிக்காமல் விஜய் மட்டுமல்ல “ஆண்டவனே தவறு செயதாலும் தவறு தவறுதான்” என்று ஒரு போடு போட்டார். தவறு செய்பவர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்றும், அதுபோன்ற நடவடிக்கை விஷயங்களில் எங்கள் அரசு தலையிடாது என்றும் கூறினார்.

அமைச்சரின் பேட்டி சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் காதுகளுக்கு சென்றாகவும், அதற்கு அவர் கோடி கோடியாய் அரசியலில் சம்பாதித்து விட்டு மற்றவரை பற்றி பேசுவதா..? என்று கடுப்பாகியதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக வரிமான வரிசோதனை தமிழகத்தில் திடீரென பல இடங்களில் நடைபெறுகிறது. இதனால் பல அரசியல்வாதிகள், பிரபல சினிமா நடிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

author avatar
Jayachandiran