ஹிஜாப்- காவி துண்டு அணியும் விவகாரம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக அரசு!

0
57

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் காவித்துண்டு அணியும் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதின் ஒரு பகுதியாக பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல் படுத்தி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் இருக்கின்ற கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவி உடையணிந்து வந்து போராட்டம் நடத்தினார்கள்.

அங்கேயே ஆரம்பித்த போராட்டம் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடா உடுப்பி யிலும் வடகர்நாடகமான பாகல் கோட்டையிலும், மலைநாடு மாவட்டங்களான சிவ மக்காவிலும், இந்த போராட்டம் அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நகரமான மாண்டியாவிலும், அரண்மனை நகரமான மைசூரிலும், இந்த போராட்டம் நடந்து வருகிறது. உடுப்பியில் நேற்று முன்தினம் இந்து முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 மாணவர்களின் மண்டை உடைந்தது. சிவமொக்கா தாவணகெரேயில் 3 தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையில் ஹிஜாப் காவி துண்டு அணியும் விவகாரம் குறித்து 19 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது ஆனாலும் தலைநகரமான பெங்களூருவில் ஹிஜாப் காவிரி விவகாரத்தில் பள்ளி, கல்லூரிகள், முன்பு இதுவரையில் போராட்டம் நடைபெறவில்லை.

இந்த சூழ்நிலையில், மாணவர்கள் போராட்டத்தை தடுப்பதற்காக பெங்களூருவிலிருக்கின்ற பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்த நேற்றையதினம் பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் கமல் பந்த் உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த சில நாட்களாக ஹிஜாப் காவி துண்டு அணியும் விவகாரத்தில் ஒரு சில பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தடுக்கும் விதத்தில் பள்ளி கல்லூரிகள் பட்டப்படிப்பு கல்லூரிகள் கல்வி நிறுவனங்களை சுற்றி இருக்கின்ற 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

கல்வி நிறுவனங்கள் மீது கூடவும் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு நேற்று முதல் வருகின்ற 22-ஆம் தேதி வரை அமலிலிருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.