அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

0
106
Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!
Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி!

சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது.

ஆனால் இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் சௌகார் பேட்டையில் பல கடைகள் உரிமமின்றி இயங்கி வருகிறது. மாநகராட்சி அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் 160 கடைகள் சிக்கியது. இந்த 160 கடைகளும் தொழில் வரி செலுத்தாமலும் ,உரிமம் இன்றியும் இயங்கி வந்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகராட்சி இந்த 160 கடைகளுக்கும் அதிரடியாக சீல் வைத்தது. மேற்கொண்டு எத்தனை கடைகள் இது போல் இயங்கி வருகின்றன என விசாரணை செய்து வருகின்றனர்.