மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!

0
102
#image_title

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு! தப்பி சென்ற மூவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையின் முக்கிய வீதியில் ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் மளிகை கடை உரிமையாளரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மஜித் ரோடு ரயில்வே ஸ்டேசன் அருகே கடந்த இரண்டு தலைமுறையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் காளிமுத்து மகன் மனோபாலா. இவர் இன்று தனது மளிகை கடைக்குள் மர்ம நபர்களால் தலை, கை, கால் என சராமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த அழகுப்பாண்டி, அனுப்பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் உட்பட மூவரும் தனது கடைக்கு வந்து பணம் கேட்டதாகவும், அதனை தர மறுத்ததன் காரணமாக தன்னை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதாகவும் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் ஆட்டோவில் வந்து தப்பி சென்ற மூவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். மாலை நேரத்தில் அதிக ஆட்கள் நடமாடும் பகுதியில் மளிகை கடைக்குள்ளேயே சென்று உரிமையாளரை மூவர் சராமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Savitha