செல்போன் பயன்படுத்திய வரை கண்டித்த அண்ணன்! விபரீத முடிவை மேற்கொண்ட தங்கை!

0
71

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் தும்பிலி பகுதியைச் சார்ந்த 18 வயதான இளம்பெண் அடிக்கடி கைப்பேசியை பயன்படுத்தி வந்தார். இரவு, பகல், பாராமல் அந்த பெண் தொடர்ந்து கைபேசியை பயன்படுத்தியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதனை அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் சகோதரனும் கண்டித்திருக்கிறார்கள், வீட்டில் நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கூட அந்த பெண் மறுபடியும் கைபேசியை பயன்படுத்திக்கொண்டிருந்தாள்.

அந்த பெண்ணின் சகோதரன் கண்டித்திருக்கிறார் இதன் காரணமாக, இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டாகியிருக்கிறது. அதன்பிறகு சகோதரன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கைபேசி பயன்படுத்துவதை அண்ணன் கண்டித்ததன் காரணமாக வீட்டில் யாருமில்லாத சமயத்தில் அந்தப் பெண் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மாலை 5 மணியளவில் சகோதரன் வீட்டிற்கு வந்த சமயத்தில் தன்னுடைய தங்கையின் அறை பூட்டி இருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது தங்கை அறையிலிருக்கின்ற மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார், இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

கைபேசி பயன்படுத்துவதை அண்ணன் கண்டித்ததன் காரணமாக, தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.