ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

0
91
School boy killed in Erode district! The people of the area are sad!
School boy killed in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெருந்துறை ஆர் எஸ்.காம் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் கபிலன் (12). இவர்  பெருந்துறை ஆர் எஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா அணிந்த பள்ளிகளின் நடத்தப்பட்டதையொட்டி கபிலன் அவரது பள்ளியில் தங்கையுடன் சென்றிருந்தார்.

மேலும் கபிலன் அவரது தங்கை இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எமரால்டு சிட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக ஒரு பைக் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பைக்கு எதிர்பாராத விதமாக கபிலன் மீது மோதியது. விபத்தில் கபிலன் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே விழுந்தார்.

மேலும் கபிலினை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றன மேலும் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இது தொடர்பாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில்  போலீசார் விரைந்து வந்து கபிலனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்குச் சென்ற சிறுவனின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலியான  சம்பவம் இப்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K