சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு!

0
107

சவுக்கு சங்கரின் தண்டனைக்கு இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் நிபந்தனையோடு உத்தரவு!

சவுக்கு என்ற இணையதளம் மூலமாகவும், பல யுட்யூப் சேனல்களிலும் அவர் அரசியல் விமர்சனங்களையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றியும் பேசி வந்தார். கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சியினரையும் அவர் விமர்சித்து வந்தார்.

ஒரு யுட்யூப் சேனலில் பேசும்போது “நீதித்துறை முழுவதும் ஊழலில் மலிந்துவிட்டதாக” பேசியதை அடுத்து அவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் கடலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இப்போது அவரின் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணை நடக்கும் வரையில் அவர் இந்த வழக்கு எதுவும் பேசக் கூடாது எனக் கூறி நிபந்தனை விதித்துள்ளது.

சங்கர், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார். இதையடுத்து அந்த வேலையில் இருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.