மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

0
135

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர் என்பவர் காற்றாலை மோசடி வழக்கில் சிக்கி இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்த நிலையில் சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா நாயர் கோவையில் வைத்திருந்த நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர் உள்பட மூவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற நிறுவனம் அமைத்து காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடி செய்ததற்காக இந்த தண்டனை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

கடந்த 2011 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அவர்கள் கேரளாவின் முதல்வராக இருந்த போது சோலார் பேனல் அமைத்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சரிதா நாயர் மீது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரிதா நாயர் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர், வழக்கை திசை திருப்பும் நோக்கில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk