ஷாரூக்கானுடன் கைகோர்க்கும் சமந்தா.?! நயன்தாராவுக்கு என்னாச்சு.? பரிதாப நிலையில் அட்லீ.! 

0
88

அட்லி முதன் முதலில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவர் ஹீரோயினாக நயன்தாராவை வைத்து படம் எடுத்திருந்தார்.

ராஜா ராணி படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை.

அதன்பின் அட்லி நடிகர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். தற்போது அவர் ஷாருக்கானுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியம் கொடுத்தது.

இந்தப் படத்துக்கான வேலைகளில் தற்போது ஷாருக்கான் மற்றும் அட்லி ஈடுபட்டு வருகின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் சூழலில் போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஷாருக்கான் மிகுந்த மன உளைச்சலில் இருகின்றார். எனவே, இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதனால் இந்த படப்பிடிப்பில் ஷாருக்கான் கலந்து கொள்ளாமல் போவதன் காரணமாக நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தாமதமாவதால் நயன்தாராவின் மற்ற படங்களுக்கு பிரச்சினை ஏற்படும் நிலை தற்போதுள்ளது. எனவே இந்த படத்தில் இருந்து தான் விலகிவிடலாம் என்று நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகை நயன்தாரா அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் காத்துவாக்குல 2 காதல், ஜிஎஸ் விக்னேஷ் படம், சிரஞ்சீவியின் காட்பாதர், கோல்டு, யுவராஜ் தயாளன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாமா என்று அட்லீ யோசித்து வருவதாகவும், கிட்டத்தட்ட தகவல் உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Jayachithra