முடி வெட்டுவதற்காக வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கிய சலூன் கடை உரிமையாளர்! போக்சோவில் கைது செய்த காவல்துறையினர்!

0
170

கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சார்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் ஒரு சலூன் வைத்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக அவருடைய கடைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

மணிகண்டன் முதலில் அவருடைய மகனுக்கு முடி வெட்டிவிட்டு அதன் பின்னர் அவருடைய மகளுக்கு முடி விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பணம் எடுப்பதற்காக அந்த இளம் பெண் வெளியே புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் தாயார் பணமெடுப்பதற்காக வெளியே சென்று விட்ட நிலையில் சலூன் கடை உரிமையாளர் மணிகண்டன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் அந்த இளம் பெண் திரும்பி வந்தபோது அந்த சிறுமி அழுதபடி இருந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த சிறுமியிடம் தன்னுடைய தாய் கேள்வி எழுப்பிய போது கடையின் உரிமையாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக அந்தச் சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு ஆத்திரமற்ற அந்த இளம் பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.