கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர்! குவியும் பாராட்டுக்கள்!!

0
56
Edappadi Palanisamy-News4 Tamil
Edappadi Palanisamy-News4 Tamil

கொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர் ! குவியும் பாராட்டுக்கள்!!

சேலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள நீர் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் அங்கு இருந்து 3 லட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீரானது தமிழகத்திற்கு காவேரியில் வெளியேற்றபடுகின்றது.

தற்போது தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எஞ்சிய உபரிநீர் அனைத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது வந்து கொண்டிருக்கும் நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தாலே, மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் நிலையில்தான் உள்ளது.

ஏனெனில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் பத்தடி நிரம்பிய மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று ஒரு நாளில் 15 அடி நிரம்பி இரவு 85 அடியாக உள்ளது.

காலைக்குள் 100 அடியை எட்டும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக ஒரே நேரத்தில் திறக்கும் போது அவை நேரடியாக வீணாகும்.

ஆகையால், முன்கூட்டியே அணையை திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த முடிவு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் கடந்த வருடம் அதிகபடியான மழைநீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டதால், மொத்தமாக கடலுக்கு சென்று வீணாகியது.

இந்த வருடம் நிச்சயமாக பயன்படும் வகையில் முன்கூட்டியே பாசனத்துக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார்.

தற்போது மேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் முடிவு காவிரி டெல்டா மக்கள் எதிர்பார்த்த ஒன்றாகும்.

இன்னும் சில மணி நேரத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையால்
டெல்டா பகுதியின் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமென டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன்

இன்னும் சில மணி நேரத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையால்
டெல்டா பகுதியின் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமென டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதால்
எடப்பாடியாருக்கு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K