சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு எடப்பாடியை நெருங்குகிறதா ஆபத்து?

0
108

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர் இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3,78, 31,755 ரூபாய்க்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன் குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் இருக்கின்ற சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்தும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளைக்கும், நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் இளங்கோ வணக்கம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதனை எதிர்க்கும் விதமாக, அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதியின் நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அறக்கட்டளை தரப்பில் கடந்த 2006 ஆம் வருடம் முதல் செயல்படும் ஒரு  அறக்கட்டளையில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும், மதிப்பீடு செய்வதும் சட்டவிரோதம் என்றும் வாதம் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்ற போது 17 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததாகவும் ஆனால் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில் இருப்பதாகவும் அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14,757 சதுர மீட்டர் பரப்பளவுக்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கம் வழங்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி நிர்மல் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டிடங்களை மதிப்பீடு செய்வதையும் ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க இயலாது எனவும் புலன் விசாரணையின் போது ஆதாரங்களை சேகரிக்கும் விவகாரத்தில் தலையிட இயலாது எனவும் தெரிவித்து அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.