சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் இருக்கும் உண்மையான காரணம் இதுதான்!

0
101

ஐயப்பன் அருள் பெற வருபவரை காண புலியை வாகனமாக கொண்டவர் தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் மிகப்பெரிய அருட்கடல்.

மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவர் ஐயப்பன் ஐயப்பன் வரலாறு தொடர்பாக தற்போது நாம் காணலாம்.

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார், இந்த நேரத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.

அவர்களுக்கு உதவுவதற்காக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவர் தான் ஐயப்பன் .விஷ்ணு மோகினியாக வர சிவனுக்கும், மோகினிக்கும் ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக இருந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். ஹரியும், சிவனும், அதாவது தெய்வ செயல்பாடுகள் எல்லாவற்றிற்குமே ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் பக்திமானாக விளங்கி வந்த பந்தள மகாராஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும். குழந்தையை அங்கே விட்டுச் சென்றார்கள்.

அந்தக் காட்டிற்கு வேட்டைக்கு வந்த பந்தள ராஜா குழந்தையின் அழுகுரல் கேட்டு எங்கே குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் செழிப்பான தேகத்துடன் குழந்தை ஐயப்பன் இருப்பதை கண்டான்.

ஆண்டவா என்னுடைய பிள்ளையில்லா குறை தீர்ப்பதற்காகவே இந்த குழந்தைகள் இங்கே இருக்கிறதா? என மனம் மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தால் இருவரும் இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்கள் குழந்தையைக் கண்ட அனைவரும் சொக்கித்தான் போனார்கள் ஜோதிடர்கள் இந்த குழந்தை தெய்வாம்சம் மிக்க குழந்தை என்று தெரிவித்தார்கள்.

கழுத்தில் மணியுடன் பிறந்ததால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்தார்கள். அதோடு மணிகண்டன் என்ற பெயரும் வைக்கப்பட்டது, அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தார்கள்.

இந்நிலையில், மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும், அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கு குழந்தை பிறந்தது என்று ஆனந்தம் கொண்டார்கள்.

ஆனால் எங்குமே நல்மனதைக் கெடுக்கும் சில தீய சக்திகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள்.

இதன் காரணமாக, அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது உங்களுக்கு பிறந்த குழந்தை இருக்கும்போது வேறு யாரும் எப்படி அரசனாக முடியும் என்று அரசியின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கினர்.

இதனைக் கேட்டு மனம் மாறிய அரசி தான் தாயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய் கூறினார். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன்னுடைய வயிற்று வலி தீரும் என தெரிவிக்க வைத்தாள்.

ஆனால் ஐயப்பன் அனைத்தையும் அறிந்து கொண்டு தன்னுடைய தாய்க்கு புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள், உடனடியாக வாளை எடுத்த வில்லாளி வீரன் வதம் செய்தான் மகிஷியை அவன் அவதார மகிமை பூர்த்தி அடைந்தது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

ஆகவே தேவர்களின் அரசனான இந்திரனே புலியாக மாற மற்ற தேவர்கள் புலியாக படை சூழ புலிமேல் ஏறி நாடு திரும்பினான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனை கண்டு பதறிப்போன அரசி நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டிக்கொண்டால் ஐயப்பனும் அவ்வாறே செய்தார்.

அதோடு தன்னுடைய அவதார காரணம் பூர்த்தியடைந்ததால் தான் சபரிமலையில் தவமிருக்க போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும், தெரிவித்து சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றளவும் ஐயப்பனை அங்கு அந்த தவக்கோலத்தில் பக்தர்கள் காணலாம் ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டப்பட்டிருப்பதை காணலாம் அதற்கும் ஒரு காரணமுண்டு.

ஐயப்பனை காண்பதற்காக பந்தள மகாராஜா ஒருமுறை சபரிமலைக்கு வந்த போது ஐயப்பன் தன்னுடைய தந்தை என்ற காரணத்தால் எழ முயற்சி செய்தபோது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி எறிந்தபோது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உற்றுப்பார்த்தால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்று எழுந்திருப்பது போல தோன்றும் என தெரிவிப்பார்கள்.

மற்ற கோவில்களைப் போல சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படவில்லை ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5வது நாளன்று நடை சாத்தப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் விசேஷமானவை.