சென்னை சூப்பர் கிங்கிசின் நம்பிக்கை ஆட்டக்காரரான ருத்ராஜ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இன்றைய ஐபில் நிறைவு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் டூ ப்ளஸிஸ் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். CSK ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆட்டக்காரராக ருத்ராஜ் இருந்தார். அதற்க்கு காரணம் அவர் ஏற்கனவே முந்தைய ஆட்டங்களில் எடுத்து கொடுத்த ரன்கள். 100 ரன்களை இந்த ஐபில் போட்டியில் ருத்ராஜ் எடுத்திருந்தார். தற்போது அவர் வெறும் 32 ரன்களில் ஆட்டமிழந்து இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுனில் நரேன் பந்து வீச்சில் ருத்ராஜ் கேட்ச் அவுட் ஆகி இருப்பது குறிப்பிடதக்கது.