காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…

0
83
Ruthless husband who shot his wife to get insurance money!
Ruthless husband who shot his wife to get insurance money!

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…

மத்திய பிரதேசத்தில் ராஜ் கார் மாவட்டத்தில் வசிப்பவர் தான் பத்ரிபிரசாத்.இவருடைய மனைவி தான் பூஜா. இவருக்கு கடந்த ஆண்டு  திருமணம் முடிந்தது.இந்நிலையில் இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார்.

வீடியோவை பார்த்து மனம் மாறிய அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அவரது மனைவி பூஜாவை அதாவது காப்பீடு தொகையை பெற செய்துள்ளார்.இந்நிலையில் பூஜாவை போபால் சாலையில் அழைத்துச் சென்று அங்கு மனஜோட் பகுதி அருகே அவரை தனியாக அழைத்துச் சென்று இரவு 9 மணி அளவில் அவரது கணவன் திடீரென்று துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.

இதில் பூஜா காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அவர் கணவரே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இதற்கு முன் அவர் தனது கடன்களை அடைக்க இணையதளத்தில் வீடியோக்களை தேடி பார்த்த பின்னரே மனைவியை காப்பீடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளார்.

அதன்பின் அவரை கொலை செய்து விட்டு காப்பீடு பணம் பெற்று கொடுக்கலாம் என்று முடிவும் எடுத்துள்ளார்.ஆனால் அவரது திட்டம் அரங்கேறுவதற்குள் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அவர் முரணுக்கு பிறனாக பதில் அளித்ததால் வசமாக சிக்கிக் கொண்டார்.

பத்ரி பிரசாந்துடன் தொடர்புடைய கூட்டாளி ஒருவர் போலீசார் கைது செய்து உள்ளார். குற்றம் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு பேரையும் போலீசார் தொலைபேசி மூலம் தேடி வருகின்றனர்.மேலும் சில போலீசார் தொடர்ந்து மேற்கட்ட விசாரணை நடைத்தி  வருகின்றார்கள்.

author avatar
Parthipan K