ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து போலியானவை – சுகாதார அமைச்சர் விளக்கம்

0
70

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான முன்பதிவு குவிந்துவருகிறது.

முன்பதிவு குவிந்துவருகிறது. மொத்தம் 5 தடுப்பூசிகள் மூன்றாம் கட்டச் சோதனையில் உள்ளன. அதில் மூன்று, மேற்கத்திய நாடுகளில் சோதிக்கப்படுபவை. எஞ்சிய இரண்டும் சீனாவைச் சேர்ந்தவை.  ஆயிரக்கணக்கானோர் சோதனையில் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலையில் அதற்கான முன்பதிவு குவிந்துவருகிறது. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்யா தயாரித்திருக்கும் தடுப்பு மருந்து போதிய அளவு சோதிக்கப்படவில்லை எனவும் மக்களுக்கு தடுப்பு மருந்தை முதலில் அளிப்பது நோக்கமில்லை, பாதுகாப்பான மருந்தைத் தயாரிப்பதே நோக்கம் என்று ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது. கிருமித்தொற்றுச் சூழலாக இருந்தாலும், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க, தகுந்த ஆராய்ச்சியும், சோதனைகளும் நடத்தப்படுவது அவசியம் என்று ஜெர்மானிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார். மனிதர்களிடம் நடத்தப்பட்டும் சோதனைகளில் 10 விழுக்காட்டுச் சோதனைகள் மட்டுமே வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன.

author avatar
Parthipan K