மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா?

0
66
Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!
Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா?

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதனுடன் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் பரவலை தடுப்பதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 90 சதவீதம் மக்கள் செலுத்திவிட்டனர்.

இருப்பினும் தொற்று பாதிப்புக்கள் முடிவுற்ற பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் தொற்று பாதிப்பு அதன் அடுத்த கட்டத்திற்கு சென்று அதிகளவு பாதிப்பையே தருகிறது.கொரோனா தொற்றானது ஏ1 வைரஸாக மாற்றமடைந்தது.அதனையடுத்து ஒமைக்ரானாக வலம் வந்தது.தற்போது எக்ஸ்இ வைரஸாக மாற்றமடைந்துள்ளது.தற்போது தொற்று பாதிப்புக்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.மகாராஷ்டிரா,டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.அதனை கடந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.ஐஐடி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

அந்தவகையில் இனி பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் கட்டாயம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை பொதுசெயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.அனைத்து  மாவட்ட ஆட்சியரும் அந்தந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.தற்போது அந்த உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சட்டமன்ற கூட்டுத்தொடர் நடந்து வருகிறது.இதில் வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும்  முகக்கவசம் அணிவதில்லை.இதனை கண்ட எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.முகக்கவசம் அணியாவிடில் அபராதம் வசூலிக்கப்படும் என்பது மக்களுக்கு மட்டும் தானா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா?என கேள்வி எழுப்பியுள்ளார்.அனைத்து ஆலோசனை கூட்டத்தின்போதும் சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிவதில்லை.அதனால் அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.