தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

0
93

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது.

இந்நிலையில் இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை அணியில் எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “ரிஷப் பண்ட்டை அணியில் இணைப்பதுதான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அணியில் முதல் ஐந்து வீரர்களில் இடது கை ஆட்டக்காரர்களே இல்லை. அதனால் ரிஷப் பண்ட் பொறுத்தமான வீரராக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான ப்ளேயிங் லெவன் வீரர்கள் யார் என்பதை இப்போதே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் வீரர்களிடம் கடைசி நேரத்தில் தகவல்களை தெரிவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.