திடீரென்று வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி! அதிகரிக்கும் வீட்டு கடன் தவணை!

0
84

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4.90% அதிகரித்திருக்கிறது. நீண்ட கால கடனாக பெறும் வீட்டுக் கடனில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கும். தவணை தொகை அதிகரிக்கும் சூழ்நிலையில், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுந்திருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வட்டி

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். வட்டி விகிதத்தை கடந்த மே மாதம் அவசர கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி 0.40 சதவீதம் அதிகரித்தது.

இதன் காரணமாக, வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக ஏற்கனவே அதிகரித்தது இந்த சூழ்நிலையில், மறுபடியும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் 90 பைசா வட்டி விகிதம் அதிகரித்துவிட்டது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவிருப்பதால் மற்ற வங்கிகளும் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக, வீடு வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

வட்டி விகிதத்தை உயர்த்தும் போது வங்கிகளுக்கான நிதி செலவு அதிகரிக்கிறது, வட்டி விகித உயர்வு உடனடி தாக்கம் வீட்டு கடன் போன்ற சில்லரை கடன்களில் எதிரொலிக்கும், குறிப்பாக நீண்ட காலமாக கட்டவேண்டிய வீட்டுக் கடன் தொகையில் இது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் 6.50 சதவீதம் குறைந்திருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஜூன் மாதத்தில் 7.60 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் சிலவற்றை தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது வட்டி விகிதம் உயர்வு காரணமாக,வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் 36 நாட்களுக்கும் மொத்தமாக 90 பைசா அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்து வகையான வீட்டு கடன்களும் அதிக வட்டி உயர்வை நோக்கி செல்லும். இது ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் புதிய கடன் வாங்குபவர்களின் பாதிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நீண்டகாலம் கட்ட வேண்டுமா?

வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடைசி உயர்வாக இருக்காது, பணவீக்கம் குறையும் வரையிலும் கூட இந்த வட்டி விகிதம் இருப்பதற்கான வாய்ப்புண்டு. ரிசர்வ் வங்கி 2022ஆம் வருடத்திற்குள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகித உயர்வால் வீட்டுக் கடன்களின் தவணை காலம் அதிகரிக்கும் எடுத்துக்காட்டாக ஒருவர் 20 வருடங்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், அந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாக அதிகரிக்கும் அப்படி அதிகரித்தால் அவர் கட்ட வேண்டிய தவணைத் தொகை என்பது மேலும் 24 மாதங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் தவணை எண்ணிக்கை அதிகரிக்காமல் தொகையை அதிகரிக்க வாங்கியவர்கள் விரும்பினால் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்வால் சராசரியாக 1 லட்சத்திற்கும் கூடுதலாக ரூபாய் 30 செலுத்த வேண்டும்.

சராசரியாக மாதம் தோறும் செலுத்தும் தொகை 4 சதவீதம் அதிகரிக்கும், இந்த விகிதம் என்பது நபர், வங்கி, கடன் வாங்கிய காலம், இவற்றை பொறுத்து மாறும். இது எல்லோருக்கும் ஒரே அளவாக இருக்காது என்கிறார்கள்.

கடன் பெறுபவர்கள் தங்களுடைய வட்டி சுமையை கட்டுப்படுத்த தவணை உயர்வுக்கு பதிலாக மொத்த தொகை செலுத்துதல் உள்ளிட்ட முன் பணம் செலுத்தும் முறைகளை பயன்படுத்தி குறைத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் கூடுதல் வட்டியின் சுமையைக் குறைப்பதற்கு சற்று அதை மாற்றாமல் அல்லது பாதியளவு முன்கூட்டியே செலுத்தி விடுங்கள். ஆனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காத விதத்தில் அமைகிறதா? என்பதையும் உறுதி செய்து கொள்வது மிகவும் நன்று.