இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு வாபஸ்- திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டம்!

0
112
#image_title

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது மேலும் திரும்ப பெற்றாலும் கூட அது செல்ல தக்கவையாகவே இருக்கும் மேலும் வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது 2000 ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக வைத்து அதனை பாடை கட்டி மாலை அணிவித்து சங்கு ஊதி கொல்லி வைத்து பெரியோர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

author avatar
Savitha