மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

0
67

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை வெள்ளிக்கிழமையே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சனிக்கிழமைக்கு தள்ளி போனது தற்போது மீண்டும் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

author avatar
Parthipan K