விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?

0
71
Render Corona! Lockdown again!
Render Corona! Lockdown again!

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?

ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் அனைவரும் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவானது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.

அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனாவுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக பரவ ஆரம்பித்தது.கொரோனாவின் 1 அலையிலிருந்து 2 வது மற்றும் 3 அலை என பரவி வருகிறது.கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் இந்த தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.அதுமட்டுமின்றி இந்த கொரோனா தொற்றில் இந்தியா நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.

முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளது.அந்தவகையில் நமது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையாக 28.98  லட்சத்தை தாண்டியது.இன்று காலை 8 மணியுடன் நடந்து முடிந்த 24 மணி நேர கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையாக 3,959  பேராக உள்ளனர்.நம் தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையாக 17 பேராக உள்ளனர்.தொற்றிலிருந்து ஒரே நாளில் குணமடைந்தோரின்  எண்ணிக்கையாக 1,824 பேர் உள்ளனர்.

நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்த பாடு இல்லை.மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என அனைவரும் பேசி வருகின்றனர்.