கொரோனோ நோயாளிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

0
64

கொரோனோ நோயாளிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

கொரோனோ வைரஸ் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கடும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதில் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமும் இனைந்து செயல்பட முன்வந்துள்ளது‌.

ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் அரசாங்கத்துடன் இனைந்து கொரோனோ நோயாளிகளை தன்மைப்படுத்த தனி மருத்துவமனையை உருவாக்க உள்ளது.இதில் சுமார் 100 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக உயர் தரத்தில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவே இப்நியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்தும் முதல் மருத்துவை என்பது குறிப்பிடத்ததக்கது.

இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தத்திலும் நிரந்தரப் பணியாளர்களாகவும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடையின்றி சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக சுமார் ஒருலட்சம் மாஸ்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனோ பாதிப்புகளில் உதவும் வாகனங்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ற பல்வேறு அறிக்கைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K