வெளியானது மோஷன் பிக்சர்…! கதறும் சமூக விரோத கும்பல்…!

0
93

தமிழக திரைத்துறையில் இவரை எண்ணற்ற இயக்குனர்கள் பல கருத்துள்ள காவியங்களை கொடுத்து வந்திருக்கிறார்கள் அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் மோகன்ஜி அவர்கள் இவருடைய இரண்டாவது திரைப்படமான திரெளபதி சமூகத்திற்கு பல நல்ல விஷயங்களை சொல்லி இருக்கின்றது நாடக காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது ஒரு சிலர் அந்த திரைப்படத்தை விமர்சனம் செய்திருந்தாலும் கூட அனேக மக்களின் மனக்குமுறல்களை வெளிக்கொண்டு வந்த ஒரு படமாக த திகழ்ந்தது.

அந்த வகையில் அடுத்தபடியாக திரு மோகன்ஜி அவர்கள் இயக்கும் திரைப்படம் தான் ருத்ர தாண்டவம் இந்நிலையில் நேற்றைய தினம் அந்த திரைப்படத்தின் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டது இத்திரைப்படத்தின் தலைப்ப ருத்ரதாண்டவம் என்று வந்திருக்கிறது இதற்கு காரணமும் இருக்கிறது சிவபக்தரான மோகன்ஜி அவர்கள் சிவனின் மீது மிகப்பெரிய பக்தியை கொண்டிருப்பவர் அதன் காரணமாக கூட இந்த தலைப்பு வைக்கப்பட்டு இருக்கலாம்.மதமாற்ற கும்பல் சாடும் விதமாகவும் ஊடகங்களை குறிப்பிடும் விதமாகவும் இந்த மோஷன் பிக்சர் அமைந்திருக்கிறது.

காவல்துறையை குறிப்பிடும் விதமாக துப்பாக்கியும் தோட்டாக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன அதோடு கை விளங்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மோஷன் பிக்சரை கூர்ந்து கவனித்தால் கடந்த 2/10/2008 அன்று அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் புகை பிடித்தல் தடை செய்யப்படும் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை குறிப்பிடும் விதமாகவும் இந்த மோஷன் பிக்சர் அமர்ந்து இருப்பது தெரியவரும்.
அதோடு திரௌபதி திரைப்படத்தின் போஸ்டரில் வந்ததைப் போன்றே இந்த மாசம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவோம் என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது திரௌபதி திரைப்பட மோசன் பிக்சர்ஸ் சாதிகள் உள்ளதடி பாப்பா என்ற வாசகம் இருந்தது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

மொத்தத்தில் சமூகத்திற்கு விரோதமாக நடைபெறும் பல விஷயங்களை வெளிக் கொண்டுவர திரௌபதியை அடுத்து மற்றுமொரு திரைப்படம் விரைவில் வர இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் தொடர்ந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை இயக்கிவரும் மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்