சென்னை உட்பட ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

0
59

அந்தமான் கடல் பகுதியில் சென்ற 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இது இன்றைய தினம் மேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சேலம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கன மழைக்கும், மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வரையிலும், ஓரிரு பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து வானிலை ஆய்வு மையத்தால் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ரெட் அலார்ட் எச்சரிக்கையும் மேலே குறிப்பிடப்பட்ட இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதைத் தவிர செங்கல்பட்டு, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழையும், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதோடு புதுச்சேரியிலும், ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் வரும். 20ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழையும் மற்ற மாவட்டங்கள் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும், சூறாவளி காற்று வீசக்கூடும், அதாவது ஒரு மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.