உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் கட்சியினருக்கு EPS OPS அதிரடி உத்தரவு

0
65

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் கட்சியினருக்கு EPS OPS அதிரடி உத்தரவு.

உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது,. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமாகிய எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தலைமை தாங்கினார்கள்,.

சுமார் ஒரு மணி நேரம் நடைப்பெற்ற
கூட்டத்தில் பேசிய இவர்கள் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள்,. மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்தனர்,. மேலும் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிறப்பாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்,.

கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் எம்ஜிஆர் அவர்கள் வாரிசு அரசியல் கூடாது என்றார் அது போலவே வாரிசு அரசியல் இருக்கக்கூடாது என்று கூட்டத்தில் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்,. கட்சி நிர்வாகிகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று பேசினார்,.

இதனைத்தொடர்ந்து விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் அதற்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு சமர்ப்பிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K