ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

0
237

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்தியோதயா அண்ணா யோஜனா (AAY ) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும் என்றும் 97.9 லட்சம் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ துவரம் பருப்பு நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி தங்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள போட்டோவுக்கு கீழ் PHH அல்லது AAY என்று இருந்தால், 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக இம்மாதம் வழங்கப்படும் என்றும் NPHH என்று இருந்தால், 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K