பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!

0
114

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் சம்படி மேல் தெருவில் செங்கமலம் என்பவர் வசித்து வந்துள்ளார் .இவரது கணவர் கணேசன், கடந்த  8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.

இதனால் அவர் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக இரண்டு மகள்களை தனது உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு ,மகன் கோமதிசங்கர் என்பவருடன் செங்கமலம் வசித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகளை களைந்த நிலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மகனுடன் செங்கமலம் தனியாக வசித்து வந்ததை கண்காணித்த மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம், இரவு வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், அந்த கும்பலை எதிர்த்து செங்கமலம் போராடியதால், சரமாரியாக கட்டையால் அடித்தும் இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் உடலை அருகில் உள்ள வயலில் வீசி விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளனர்.

மேலும் இந்தக் கொடூரச் செயலுக்கு ஈடுபட்டது யார் ? என்றும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்றும் பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K