ஜெகன்மோகன் ரெட்டிக்கு Dr.ராமதாஸ் நெகிழ்ச்சி கடிதம்.! வாய் நிறைய வாழ்த்துடன் மடல்.!

0
53

ஆந்திரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்தினை வலுப்படுத்தும் விதமாக 56 சமூகங்களுக்கு தனித்தனியாக வாரியம் அனைத்து நடவடிக்கை எடுத்து இருக்கின்றார் ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் இதைக் கேள்வியுற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

அக்கடிதத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலின் போது தாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 56 சமூகங்களுக்கு தனித்தனியாக வாரியம் அமைத்து ஐம்பதிற்கும் மேலான வாரியத் தலைவர் பதவிகளை பெண்களுக்கு கொடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த நடவடிக்கை சமூக முன்னேற்றத்தையும் சமூக நீதியை நிலைநிறுத்தும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்றது ஆகவே இந்த நடவடிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சாதிகள் இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டு சாதியினை அடித்தளமாக கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு உண்மையான சமூகநீதியை மதிக்கும் ஒரு மனிதரை இங்குதான் பார்க்கிறேன் ஆந்திர மாநிலத்தின் சமூகநீதி காவலராக இருவரும் தங்களுக்கு ஆந்திர மாநிலத்தின் சமூகநீதிக் காவலர் என்ற பட்டத்தினை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here