சாத்தான்குலம் சம்பவத்தைக் கண்டித்து நடிகர் ரஜினி காந்த் ஆவேசம்!

0
61

சாத்தான் குலம் விவகாரத்தில் தொடர்புடைய ஒருவரைக் கூட விடக்கூடாது என்று ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சாத்தான்குலத்தில் உள்ள காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி வரை எதிரொலித்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பிரபல திரைப்பட நடிகை, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களும் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர்.

மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த சாத்தான்குலம் சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விட்டு விட கூடாது அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டுமென்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, சாத்தான் குலம் தந்தை மகனை கொடுமை செய்து கொல்லப்பட்டது மனித நேயத்துக்கு எதிரானது என்றும் மற்றும்,காவலர்கள் சிலர் மேஜிஸ்திரேட் இடம் கடுமையாக நடந்து கொண்ட முறைகளையும் கண்டு நான் அதிர்ந்து போனேன்.இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.சத்தியமாக ஒருவரைக் கூட விட்டு விடக் கூடாது என்று கூறியுள்ளார்.

author avatar
Parthipan K