தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

0
82

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே

இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் விசாரணையின் முடிவில் ரஜினியின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்துமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவருடைய வழக்கறிஞர் அவரிடம் ஒப்படைப்பார் என்றும் விசாரணை ஆணையத்தின் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

மூடி சீலிடப்பட்ட கவரில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு நாளில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
CineDesk