திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

0
78

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

பாஜக கட்சியின் முப்பெரும் விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் கையெழுத்து போராட்டத்தை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து சில நாட்களில் 2 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தான் எதிர்பார்த்ததை விட அதிக்பட்சமான மக்களின் ஆதரவு கிடைத்த காரணத்தால் ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். எதற்காக இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடம் கையெழுத்து வாங்கினோம் என்கிற விளக்கமுக் திமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. மக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்துகள் இந்திய குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் கையெழுத்து போராட்ட இயக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இந்திய நாட்டுக்கு திமுக செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றும் நடிகர் ராதாரவி பாஜக கூட்டத்தில் பேசினார். மேலும், தமிழகத்தில் பாரதியாருக்கு பெரிய அளவில் சிலை வைக்க. வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விவகாரத்தில் சரியான கருத்துகளையே கூறி வருவதாகவும் கூறினார். இந்த பாஜக முப்பெரும் விழாவில் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜகவின் சில முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jayachandiran