ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

0
129
#image_title

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை!

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட்வந்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காயத்திலிருந்து குணமடைந்து வரும் பண்ட் தீடீரென்று டெல்லி மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி-குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்தார்.

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் நடப்பு ஐபிஎல் தொடரில் பண்ட் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு வந்து டெல்லி-குஜராத் மோதிய ஐபிஎல் போட்டியை பண்ட் பார்த்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பண்ட்-ஐ மைதானத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் பண்ட் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha