நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48

0
93


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது.

இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.


இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நாளை மதியம் 3.25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ஜிசாட் 6 செயற்கைக்கோள் இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு செயற்கைகோளும் அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளன நாளை விண்ணில் பாய உள்ள பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75 ஆவது ராக்கெட் என்ற சிறப்பைப் பெறுகிறது.

author avatar
CineDesk