பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

0
74

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாமக அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அவர்களால் 10 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டது அதில் பிரதானமான கோரிக்கை தஞ்சை டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது.இதனை நிறைவேற்றும் விதமாக தஞ்சை உட்பட 8 மாவட்டங்களை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.அதாவது விவசாயம் சாராத எந்த துறைக்கும் அங்கு அனுமதி இல்லை என்பதே அதன் பொருள்.ஆனால் கடந்த திமுக ஆட்சியின் போது 2011 ல் எண்ணெய் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பட்டியலில் உள்ளதால் அதன் மீது மாநில அரசு சட்டம் இயற்றுவதில் சட்டசிக்கல் உள்ளது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் தலைமை செயளாலர் திரு.சண்முகம் தலைமையில் மூத்தவழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.எனினும் பிப்ரவரி 18 அன்று சட்டமன்றத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல்செய்வதில் அதிமுக அரசு முனைப்பு காட்டுவதாக தலைமைசெயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Parthipan K