தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

0
74
Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!
Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

தடுப்பூசியின் பயம் நாளுக்கு நாள் மக்களுக்கு இருந்து கொண்டே வந்தது. இதனை அடுத்து அரசுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று தெரிவித்தது. அறிவியல் அறிஞர்களும் இதையே கூறிக் கொண்டு வந்த நிலையில் இதைப் பற்றிய தவறான செய்திகளும் ஒரு பக்கம் பரவியபடி இருந்தது.

நடிகர் விவேக் கூட தடுப்பூசியினால் தடுப்பூசியினால் தான் என்று பலர் கருதிய நிலையில் கொரோனாவை தொடர்ந்து பல்வேறு வகையான தொற்றுகள் மனித உடலில் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று அனைவரும் கூறிய நிலையில் மக்கள் தங்களின் உயிரைக் காப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் சில இடங்களில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகள் கிடைப்பதில்லை நீண்ட நேரங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தாலும் கூட அவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. பல ஊர்களில் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து மதுரை புது விளாங்குடியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ சைமன். மென்பொருள் பொறியாளரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சென்று சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார். இவருக்கு வயது 29 என்று தெரிவித்தனர்.

அவர்களுக்கு இரண்டு பேருக்குமே கோவிட் ஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டு சிறிதுநேரம் கண்காணிப்பில் இருந்த போது எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படாததால் அவர்கள் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கழிவறைக்கு சென்ற சைமனுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிரிழந்த சைமனுக்கு கடந்த ஆறு மாதங்களாக நீரிழிவு நோய் இருந்தும், அவர் சிகிச்சை ஏன் எடுக்கவில்லை எனவும், மேலும் அவருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து, உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னரே அவர் உயிர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.