காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து!!

0
115
#image_title

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து . வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் மிடாஸ் தனியார் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் பணிபுரிய காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலையில் பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அதன்படி காஞ்சிபுரம் அடுத்த மாகரல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை வேளை பணிக்கு 26 தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுள்ளனர்.
அப்போது மாகரல் அடுத்த காவாந்தண்டலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பக்கவாட்டுப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த தொழிலாளர்களை கிராம மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்துக்கு குறித்து தகவல் அறிந்து வந்த மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Savitha