விவாகரத்து செய்த முதல் மனைவியுடன் மீண்டும் திருமணம்;தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!

0
72

சென்னையில் பிரித்விராஜ் என்பவர் விவாகரத்து செய்த முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரித்விராஜ்.34 வயதான இவர்,நேற்று முன்தினம் அவரது வீட்டின் வாசலில் நின்றுகொண்டு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு உடம்பில் தீ வைத்து கொண்டார்.வலி தாங்க முடியாத இவர் அலரியுள்ளார்.இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து உடலில் எறிந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை அடுத்து மதுரவாயல் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.மரண வாக்கு மூலம் ஒன்றை அவர் அளித்திருந்தார்.பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது, பிரித்விராஜ் அம்பத்தூர் பாடியில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சத்யாவுக்கும் விவாகரத்தானது.
பிரித்விராஜ் வேறொரு திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் முதல் மனைவியின் சகோதரர்கள் இவரை சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் வைத்து தூக்கிச்சென்று தனது சகோதரியை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி
கட்டாயப்படுத்தியதில் அவர் திருமணம் செய்து கொண்டார்.இதில் மனவேதனை அடைந்த பிரித்விராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்து தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரித்திவிராஜ் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரித்விராஜ் தற்கொலைக்கு காரணமான அவரது முதல் மனைவி மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
Parthipan K