அமெரிக்க அதிபரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! நடுக்கத்தில் சீனா பாகிஸ்தான்!

0
79

எப்போதும் இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்ற உலக நாடுகள் எப்போதும் இந்தியா மீது சற்று பயம் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதோடு இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையிலும் ஒரு மிகப்பெரிய செல்வாக்குமிக்க நாடாகவே திகழ்ந்து வருகிறது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முதன்முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து இந்தியாவின் செல்வாக்கு உலக அரங்கில் உயர்ந்து கொண்டே வருகிறது என்றால் அது மிகையாகாது.

அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இந்தியாவிற்கு உண்டு என்பதற்கு சாட்சியாக பல காரணங்கள் இருந்திருக்கின்றன. ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்த போதும் சரி, அதன் பிறகு பராக் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பின்னரும் சரி, இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கத்துடன் இருந்து வருகிறது.

அதிலும் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்த சமயத்தில் இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பதுதான் உண்மை அவர் இருந்த சமயத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அங்கே தனி செல்வாக்கு இருந்தது என்று சொல்கிறார்கள். அதன்பிறகு டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட பிறகு அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே இருந்த நட்புறவு சற்று சுணக்கம் ஏற்பட்டதாக ஒரு தோற்றம் உண்டானது.

ஆனால் அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டதும், அதேபோல டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்ததும் என இரண்டு பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

அதிலும் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவுற்ற பின்னர் அவருக்கு விடைபெறும் விழா நடைபெற்ற சமயத்தில் அங்கு இருந்த இந்தியர்கள் உட்பட அனைவரும் மீண்டும் ஒருமுறை தாங்களே அதிபராக இருங்கள் என்று அவரிடம் மன்றாடியது உலக நாடுகளையே வியக்க வைத்தது.

இந்த நிலையில், இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் இல்லாத அளவில் தற்சமயம் அதிக நெருக்கம் காட்டி விடுகிறது பிரதமராக பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு பாராட்டிக் கொண்டார். அவனை இடத்தை தற்சமயம் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல சமயங்களில் இரண்டு தலைவர்களும் தொலைபேசியில் மட்டுமே உரையாடினார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் 24ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, உள்ளிட்ட நான்கு நாடுகள் ஒன்றிணைத்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். அவர் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் சீனாவிற்கு எதிராக இந்த அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்,குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் எதிர்வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த உச்சி மாநாட்டில் உலக அளவில் சர்வதேச நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் இந்தோ பசுபிக் விவகாரம் தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்ற பல முக்கிய விவகாரங்களில் விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்ப இருக்கின்றார். இதற்கான அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களை சந்தித்து உரையாற்ற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியா பிரதமர், ஜப்பான் பிரதமர் சுகா உள்ளிட்டோரை சந்தித்து நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அதேபோல தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தான் விவகாரம் அதிகரித்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு கூட்டாண்மை, கடல்சார் பாதுகாப்பு கல்வி பருவநிலை மாற்றம், என்று பல விஷயங்கள் தொடர்பாக தலைவர்கள் கருத்து பரிமாறிக் கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க உறவுகள் தொடர்பாகவும் ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதோடு மாநாட்டை அடுத்து 25ஆம் தேதி ஐநா பொதுச் சபை 76 ஆவது அமர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 100 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதோடு ஐநா சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் வலியுறுத்தி உரையாற்றுவார் என்று சொல்லப்படுகிறது. நரேந்திர மோடி ஜோ பைடன் உள்ளே இருப்பது இந்தியாவின் எதிரி நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.