‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

0
63

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்ஆன ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (26-ம் தேதி)  11 மணிக்கு தொடங்க இருக்கிறது . வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத்தின் மூலம் 67 வது முறையாக உரையாற்றுகிறார்.
தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார்.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.

author avatar
Parthipan K