தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குதூகலத்தில் மது பிரியர்கள்!

0
144

தமிழகத்தில் எங்கே கூட்டம் இருக்கிறதோ, இல்லையோ, இந்த இடத்தில் மட்டும் சொல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். அதிலும் கடை திறக்கும் நேரத்தில் இருந்து மூடும் நேரம் அறையில் சற்று கூட ஓய்வே இல்லாமல் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இன்னும் சொல்லப்போனால் நியாயவிலை கடைகளில் கூட இந்த அளவிற்கு கூட்டம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

அந்த அளவிற்கு இந்தக் கடையில் மட்டும் கூட்டம் எப்போதும் இருக்கும். நோய்த்தொற்று பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடி இருந்த சமயத்தில் குடிமகன்கள் சற்றே வெதும்பி தான் போனார்கள் .அதன் விளைவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட அன்று கோடிக்கணக்கான ரூபாயில் விற்பனை செய்யப்பட்டது மதுபானங்கள்.

இன்னும் சொல்லப்போனால் அரசு கஜானாவை நிரப்பும் ஒரு கரன்சி மிஷின் ஆகவே இந்த டாஸ்மாக் கடைகள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த மாநில அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் மது பிரியர்களுக்கு தெரியும்படி விலைப்பட்டியல் வைக்கப்படும் என்று கூறியிருக்கிறது.அதாவது டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் செயல்பாடுகள் தொடர்பாக முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், ஆய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் இருக்கின்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இதில் தமிழகம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் நிர்வாகத்திலிருந்து வரும் குறைபாடுகளை சரி செய்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை செய்து இருக்கிறார்.

இதற்குப் பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் 5110 டாஸ்மாக் கடைகளும், 2808 பார்களும், இருக்கின்றன. நோய்த்தொற்று காரணமாக அவைகள் தற்சமயம் இயங்கவில்லை. பல காலகட்டங்களில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 529 டாஸ்மாக் கடைகளில் நடந்த விதி மீறல் குறித்து 1072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என கூறியிருக்கிறார்.

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுப்பதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாக மது பிரியர்களுக்கு தெரியும் விதத்தில் ஒரு வாரத்திற்குள் விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறியிருக்கிறார் அமைச்சர்.அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தை விட ஒரு நிமிடம் கூட கடைகளைத் திறந்துவைத்து மதுபானங்களை விற்பனை செய்ய இயலாது எனவும், கூடுதல் நேரம் கடைகளைத் திறந்துவைத்து மதுபானங்கள் விற்பனை தெரியவந்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

பல கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக, மதுபாட்டில் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறையை செயல்படுத்த இயலாத சூழ்நிலை இருக்கிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காகவே இரசீது வழங்கும் நடைமுறை கொண்டு வர வலியுறுத்தப்படுகின்றது. இதற்காக தான் விலைப்பட்டியல் தற்சமயம் வைக்கப்பட உள்ளது என்று கூறியிருக்கின்றார்.இந்த விலை பட்டியலிலிருந்து ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தாலும்கூட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை வருங்காலங்களில் அதேபோல இலக்கு நிர்ணயம் செய்யப்பட போவது கிடையாது. டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. ஸ்டாலின் ஆலோசனையின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.