உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி

0
91
pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today2
pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today2

உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து கொடூரம்! தூக்கில் தொங்கிய கர்ப்பிணியான காதலி

திருமணம் செய்து கொள்வதாக தான் காதலித்தவனால் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியான காதலி, அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் தான் ரோஜா. இவர் சென்னை அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர், காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ஏற்கனவே திருமணம் ஆன நபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரோஜா கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜா ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.

காதலனான ராஜேஷும் இவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொள்ள ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் தான், காஞ்சிபுரம் அருகிலுள்ள பரந்தூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சசிகலா நடராசனுக்குச் சொந்தமான தோட்டம் என அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்கு, மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த பெண் ரோஜா என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த கர்ப்பிணி பெண்ணான ரோஜாவின் உடல் முழுவதும் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரோஜாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் இது கொலையாக இருக்க கூடும் என ராஜேஷ் மற்றும் இதில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து வேண்டும் என்று கூறி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pregnant lady suicide in kanchipuram news4 tamil latest crime news in tamil today3
pregnant lady suicide in kanchipuram news4 tamil latest crime news in tamil today3

மேலும் இறந்த பெண்ணான ரோஜா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கம் போல அப்பகுதியில் உள்ள வி.சி.க நிர்வாகிகள் அந்த பெண்ணிற்கு ஆதரவாக மருத்துவமனை முன்பு குவிந்து விட்டனர். மேலும் ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ரோஜாவைக் காதலித்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகாட்டி கொடுமைப்படுத்திக் கொன்றுவிட்டார் என்றும் பெண்ணின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காதலித்து விட்டு திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரிகிறது, என்று காவல் துறை ஆய்வாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், பின்னர் இதை கொலை வழக்காகப் பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜேஷைக் கைது செய்துள்ளனர்.

ரோஜா மரணம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் கூறியதாவது.ஏற்கெனவே திருமணமான இந்த நபரை இறந்து போன ரோஜா காதலித்து வந்ததாகச் சொல்கின்றனர். மேலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த நபரை அவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முழுமையாக முடிந்த பிறகே மற்ற விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K