சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள் என மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

0
102

சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள் என மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிக்காக சென்னை மாநகரில் நாளை அக்டோபர் 15 சனிக்கிழமை அன்று அடையாறு, வானகரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள்:

போரூர்:

தேவதாஸ் நகர், மலையம்பாக்கம், கோவூர், பாலாஜி நகர், பஜார் மெயின் ரோடு, சுபலட்சுமி நகர், பூசணிகுளம், பூந்தமல்லி ருக்மணி நகர், முத்தமிழ் நகர், பாபு கார்டன், நண்பர்கள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டும்.

வானகரம்:

திரு. வி.க நகர், மகாலட்சுமி நகர், எஸ் ஆர் எம் சி நகர், செட்டியார் அகரம் பிரதான சாலை, நூம்பல் மெயின் ரோடு, அதன் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் (1,000 முதல் 8,500 கதவு இலக்கு எண் வரை).

அடையாறு:

பெத்தல் நகர் 1 முதல் 24 ஆவது தெரு வரை வடக்கு, ஈ.சி.ஆர் பகுதி, ஈஞ்சம்பாக்கம், சோழமண்டல் தேவி நகர், திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி:

செந்தில் நகர், ஆவடி பேருந்து பணிமனை, பி.டி. மூர்த்தி நகர், சக்கர கார்டன், மருதுபாண்டி நகர், புழல் மகாவீர் கார்டன், சக்திவேல் நகர், செந்தமிழ் நகர், பிருந்தாவனம் நகர், ஜே.பி .நகர், கலைமகள் நகர், முருகப்பா பாலிடெக்னிக், பி எஸ் என் எல் சி போன்ற பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும்.

author avatar
Parthipan K