தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம் சுரக்ஷா திட்டம் பற்றி தங்களுக்கு தெரியுமா?

0
85

தபால் நிலையத்தை பொருத்தவரையில் நீண்டகால முதலீடு குறுகிய கால முதலீடு 5வருட முதலீடு, பென்ஷன், மாத வட்டி, என நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து உங்களுடைய வருவாய் மாறுபடும்.

ஆனால் லாபம் என்பது சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்திய தபால் துறை சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் திட்டங்களில் நல்ல வருவாய் கொடுக்கும் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா திட்டமிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் 1411 ரூபாய் முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய் வரையில் பெறமுடியும் என சொல்லப்படுகிறது.

திட்டத்தின் அம்சங்கள்:

19 வயது முதல் 55 வயது வரையில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். இதில் 10000 முதல் 10 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 மற்றும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சமாகும். பிரிமியம் செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

பாலிசி காலத்தை தவறவிட்டால் மீதமிருக்கின்ற பிரீமியம் செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டு கொள்கையாகும். அதோடு பாலிசியை எடுத்து 5 வருடங்களின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இருக்கிறது.

19 வயது முதலீட்டாளர் 55 வயது வரையில் 10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால் அவர் ஒவ்வொரு மாதமும், 1515 ரூபாய் திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

58 வயது வரையில் முதலீடு செய்ய அவர் 1,463 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதோடு 60 வயது வரையில் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக 1411 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். 55 வயதில் முதலீட்டாளர் 31.60 லட்சம் 58 வயதில் 33.40 லட்சமும், 60 வயது முதிர்வு தொகையாக 34.60 லட்சமும், பெறுவார்கள்.

கிராமம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக கடன் வசதி உட்பட பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள் ஆனாலும் இந்தத் திட்டத்தில் 4 வருடங்கள் முதலீடு செய்த பிறகு மட்டுமே இது கிடைக்கும்.

பணத்தை மாதம்தோறும் காலாண்டு அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்யலாம். அவசர காலங்களில் 30 நாட்கள் சலுகைக் காலம் அனுமதிக்கப்படுகிறது.

முதலீடு செய்த நாளிலிருந்து பாலிசியை 3 வருடங்களுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம். 5 வருடங்களுக்கு முன் இந்த பாலிசியை சரண்டர் செய்தால் போனஸுக்கு தகுதியில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்கு இந்தியா போஸ்டின் அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிடுங்கள்.