மாதம் 1400 சேமித்தால் 35 லட்சம்! போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அசத்தல் திட்டம்

0
112

மாதம் 1400 சேமித்தால் 35 லட்சம்! போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அசத்தல் திட்டம்

 

போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.

 

பொதுமக்கள் வசதிக்காக வங்கிகள் வழங்கும் சேமிப்பு திட்டத்தை போல போஸ்ட் ஆபிஸிலும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் கிராம சுரக்‌ஷா திட்டம் அமைந்துள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் அதன் மூலமாக முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் வரை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,சாதாரண மக்களும் இந்த சிறு முதலீடு மூலம் லட்சக்கணக்கான வருவாயை பெறலாம். இது கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான ஆயுள் காப்பீடு திட்டமாகும். கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் உதவும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த திட்டத்தின் கீழ் பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இதில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு 19-55 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டு, ஆறு மாதம் மற்றும் ஆண்டு கணக்கு என்ற அடிப்படையில் செலுத்தலாம்.

 

இந்த திட்டத்தில் 19 வயதுடைய ஒரு முதலீட்டாளர் அவருடைய 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால் அதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும்.

 

முதலீட்டாளர் அவருடைய 58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் மாதம் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.இந்த தொகையை ஏற்கனவே குறிப்பிட்டது போல மாத, 3 மாதம், 6 மாதம் மற்றும் ஆண்டு கணக்கில் செலுத்தலாம்.

 

இந்த அடிப்படையில் முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.

 

இந்த திட்டத்தில் கடன் வசதி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருவர் 4 ஆண்டுகள் வரை முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் கிடைக்கும்.அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.

 

இந்த திட்டத்தில் முதலீடு செய்த நாளிலிருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பை மூடினால் போனஸுக்கு தகுதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K