தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

0
71

வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, ரூபாய் 2500 தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, போன்றவையும் இனாமாக வழங்கப்படும். அதோடு கரும்புத் துண்டு க்கு பதிலாக ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்படும் எந்த தேதியில் யார் வரவேண்டும் என்று ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் முதல்வர்.

கடந்த முறை பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி, ஆயிரம், ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்க பட்டு அந்த நிலையிலே, எதிர்வரும் பொங்கலில் ரூபாய் 2500 அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.