புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

0
96

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றினார் திரு.விபல்குமார். இவர் இன்று மதியம் ஒரு மணி அளவில் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அங்கு மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விபல்கமாரின் சொந்த ஊர் தமிழக எல்லை பகுதியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள புதுச்சேரியின் தொண்டமாநத்தம் கிராமம் ஆகும். தற்போது அவர் வில்லியனூரில் இடம் பெயர்ந்து சொந்த வீட்டில் குடும்பத்துடன் இருந்து வந்தார்.

தற்கொலைக்கான காரணம் அரசியல் அல்லது உயர் அதிகாரிகளின் குறுக்கீடுகளால் அதிக மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

author avatar
Parthipan K