கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!

0
85

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!

 நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் குமரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ணா ரேகா என்பவர் பங்கேற்றார்.

மேலும் கடந்த 25ஆம் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று  கிருஷ்ணரேகா அசத்தினார். நிலையில் நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் மூன்று முறை தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. அதில் பங்கேற்ற கிருஷ்ண ரேகா ரெண்டு போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து தங்கப்பதகத்தை வென்று சாதனைப்படுத்துள்ளார்.

மேலும் தங்கப்பதக்கம் வென்ற தகவல் அறிந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் கிருஷ்ணரேகாவை செல்போனை தொடர் கொண்டு அவரது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கிருஷ்ணா ரேகாவின் வெற்றியானது குமரி மாவட்ட காவல்துறைக்கு பெருமையை சேர்த்துள்ளதாகவும் போலீசார்கள் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K