எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

0
168
#image_title

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தம்பள பள்ளி அருகே உள்ள மொருசுபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிங்கலு நாயுடு (70). அவருடைய மனைவி வெங்கட சுப்பம்மா(60). நரசிங்கங்கலு நாயுடுவின் சகோதரர் அப்பல்லா,
நரசிங்கலு நாயுடு மதனபள்ளியில் வசித்து வந்தார்.

அவர் வசித்து வந்த வீடு தொடர்பாக அவருக்கும் அவருடைய சகோதரர் அப்பல்லாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பெல்லா மதனப்பள்ளி காவல் நிலையத்தில் சகோதரருடன் நிலவி வந்த சொத்து பிரச்சனை தொடர்பாக புகார் அளித்து இந்த வீட்டை தனது பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

சிவில் விவகாரமான இந்த விஷயத்தில் தலையிட கூடாத போலீசார் நரசிங்கலு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன நரசிங்க நாயுடு அவருடைய மனைவி ஆகியோர் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தலையிட கூடாத விஷயத்தில் போலீசார் எல்லை மீறி தலையிட்டதால் பயந்து போன மூத்த தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதனப்பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சொத்து பிரச்சனையில் தலையிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரின் உறவினர்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தம்பதிகளின் தற்கொலை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த மதனப்பள்ளி இரண்டாவது நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

author avatar
Savitha